Show all

மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்ட மும்பை மேயர்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்னேகல் அம்பேத்கர்(43). பதவியேற்ற சில மாதத்திலேயே காரில் சிவப்பு விளக்கு பொருத்தியபடி வலம் வந்ததால் ஊடகத்தின் வெளிச்சம் அவர் மீது விழுந்தது. இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், “நான் முதல்வருக்கு இணையான மக்கள் பணியை மேற்கொள்வதாக நினைக்கிறேன். எனவே சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரை உபயோகிப்பதில் எந்த தவறும் இல்லை என்று நான் நம்புகிறேன்” என்றார்.

இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தன்னம்பிக்கையுடன் தனது பணிகளை மேற்கொள்வதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அதே நேரம் அவரது ஆட்சி ஹிட்லரின் ஆட்சியைப் போல் இருப்பதாக நான் உணர்கிறேன். ஒரு தனிப்பட்ட நபரின் கையில் ஒட்டு மொத்த அதிகாரமும் குவிந்தால் இப்படிதான் நடக்கும் என்று தோன்றுகிறது” என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.