Show all

வேலூரில் ஒரு கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்

வேலூர் காட்பாடி பகுதியில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் குறித்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.மாவட்டக் கண்காணிப்பு ஆய்வாளர் கமலக்கண்ணன் காவல் ஆய்வாளர் நந்தக்குமார் துணை காவல் ஆய்வாளர் கவுரி, சிவக்குமார் வேலூர் காட்பாடி பகுதியில் இரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

காட்பாடி சில்க்மில்க் பகுதியில் ஒரு விடுதியில் கொக்கைன் போதைப்பொருள் வைத்திருந்த நால்வர் சிக்கினர். அவர்கள் அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஜாகிர்உசேன், மயிலாடுதுறை கொரநாடு காமித், சத்துவச்சேரு நிர்மல், தினகரன் ஆகியோர். இவர்களிடமிருந்து 950கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ஒருகோடி. இந்தப் போதைப்பொருள் யாரிடம் சேர்க்கப்பட இருக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.