Show all

பெண்கள் சிறையின் அடிப்படை வசதி பற்றி உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பெண்கள் சிறைகள் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் உள்ள சிறைகளில் அடிப்படை வசதிகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழக சிறைத்துறை சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 3 மாதங்களில் தமிழக சிறைகள் மற்றும் மகளிர் காவல் நிலைய சிறைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது 3 மாதத்திற்கு பிறகு சட்டப்பணிகள் ஆணையம் சிறைச்சாலைகளுக்கு திடீரென சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.