உலகளவில் 4 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பாகுபலி திரைப்படம், மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 76 கோடி வசூல் செய்த பாகுபலி, மூன்றாவது நாளிலேயே 160 கோடி வசூலை எட்டியுள்ளது.தொழில்நுட்ப ரீதியிலும், உருவாக்க ரீதியிலும் மிகவும் சவாலான முறையில் தயாராகியுள்ள பாகுபலி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் இந்தியா முழுவதும் வெளிவந்துள்ளது. ஹாலிவுட்டிற்கு நிகரான காட்சியமைப்புகளோடு தத்ரூபமாக படத்தை உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர். பெரும் எதிர்பார்ப்பிக்கிடையில் வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பு மழையில் நனைந்து முதல் நாளிலேயே 76 கோடி வசூலை ஈட்டியது. தற்போது மூன்று நாட்களில் 160 கோடி வசூலை எட்டியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.