Show all

யாராவது லிப்ட் தர முடியுமா தமாஷ் செய்த - சச்சின்

சச்சின் டெண்டுல்கர், விம்பிள்டன் பார்ப்பதற்காக லண்டன் சென்றிருந்தார். 11ம் தேதி, கிரேட்ஹஸ்லி சென்ற அவர் தனது டுவிட்டரில் "கடைசி பஸ்சை மிஸ் செய்துவிட்டு கிரேட்ஹஸ்லியில் நிற்கிறேன். யாராவது லிப்ட் தர முடியுமா" என்று கேட்டுள்ளார்.

இந்த டுவிட்டை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள், தலைவா, நான் இந்தியாவில் இருக்கிறேன், என்னால் முடியவில்லையே என்றும், நான் மட்டும் அங்கிருந்தால், லிப்ட் என்ன தலைவா, என் காரையே கொடுத்திருப்பேன் என்றும் சகட்டுமேனிக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

பிறகு இங்கிலாந்தில் பஸ் ஸ்டாப் என்று எழுதப்பட்ட ஒரு இடத்தில் காத்திருப்பது போன்ற இன்ஸ்டாகிராம் படத்தையும் அதில் இணைத்துள்ளார். அப்போது தான் சச்சின் தமாஷ் செய்துள்ளார் என்பது ரசிகர்களுக்கு புரிந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.