Show all

செல்பி மிஸ் ஆனது டெத் கிளிக் ஆனது

ரஷ்யாவில் பெண் ஒருவர் பாலத்தின் மீது நின்று செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்து பலியானார். ரஷ்யாவைச் சேர்ந்தவர் அன்னா க்ருபெய்னிகோவா(21). சுற்றுலா பற்றி படித்துள்ளார். அவர் தனது தோழி ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட பிற தோழிகளுடன் மாஸ்கோ நகரைச் சுற்றிப் பார்க்க சென்றார். அப்போது அவர் பாலத்தின் ஓரத்தில் சாய்ந்தபடி செல்ஃபி எடுத்தார். செல்ஃபி எடுக்கையில் நிலைதடுமாறி அவர் 40 அடி உயர பாலத்தில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.