Show all

மருத்துவ மாணவி இறந்தது தொடர்பாக விசாரணை மீண்டும் நடக்குமென தெரிகிறது

வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடைய 19 வயது மருத்துவக் கல்லூரி மாணவி நம்ரதா தாமோர் கடந்த 2012ல் உஜ்ஜெயினில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இது தற்கொலை சம்பவம் என்று போலீசார் இந்த வழக்கை கடந்த 2014ல் முடித்துவிட்டனர். ஆனால், இந்த மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாணவியின் மரணம் தொடர்பாக மீண்டும் புலன் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

2012 ஜனவரி 9ம் தேதி மூன்று மருத்துவர்கள் கையெழுத்து போட்டுள்ள மாணவி நம்ரதா தாமோரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டு, இறப்பதற்கு முன்பு உயிருக்கு போராடியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ரயில் முன்பு பாய்ந்து மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று போலீசார் வழக்கை முடித்துவிட்டனர்.

மீண்டும் அவரது வழக்கில் பிழை இருப்பதை உணர்ந்து விசாரணை நடந்த முன்வர வேண்டுமென எதிர்பார்க்கபடுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.