Show all

கமல்ஹாசன் தவறான தகவல்களை அள்ளி வீசுவதாக புகார்

கமல்ஹாசன் தவறான தகவல்களை அள்ளி வீசுவதாக அவரது முன்னாள் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். வாணி கணபதிக்கு விவாகரத்து செய்த பிறகு ஜீவனாம்சம் குடுத்தே தான் திவால் ஆகிவிட்டதாக நடிகர் கமலஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள வாணி ஜீவனாம்சம் கொடுத்து எந்த கணவனும் திவால் ஆகும் அளவுக்கு நீதி மன்றங்கள் உத்தரவிடுவதில்லை என்றார்.

விவாகரத்து செய்த பிறகு வாடகை வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளார் இதற்கு பதிலடி கொடுத்துள்ள வாணி கமல் எப்போது சொந்த வீட்டில் இருந்தார் என கிண்டலாக கேள்வி எழுப்பினார் இத்தனை ஆண்டுகளாக கமலின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத வாணி இப்பொது தவறான தகவலை அளித்ததால் தான் கமல் குறித்து பேசுவதாக உள்ளது என்றார்.

கமல் திவால் ஆகியதின் பின்னணி வேறு என்றும் அது குறித்து தாம் கருத்து சொல்ல விரும்பவில்லை என வாணி கணபதி தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.