Show all

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் இன்றைய நிலவரங்கள்

சென்னை இராதகிருட்டினன் நகர் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 74.4 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. சூலை30 வாக்குகள் எண்ணப்படும்.

தேர்தலில் முறைகேடுகள் குறித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவதாகவும் தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும் என்று கேட்கப்போவதாகவும் டிராபிக்ராமசாமி தெரிவிக்கிறார்.

நேற்றைய வாக்குப்பதிவு முடிந்த மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் மூடி முத்திரைப்பதிக்கப்பட்டு இராணிமேரி கல்லூரியில் மூன்றடுக்குப்பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.வாக்குஎ ண்ணிக்கையின் போது தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த முறை 2011 தேர்தலின் போது இத்தொகுதியில் 72.74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருத்தன. திமுக, தேமுதிக போன்ற கட்சிகள் தேர்தலைப்புறக்கணித்திருந்தன.

நாம் தமிழர் கட்சி இந்திய கம்யூனிசக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.