Show all

உலகளாவி தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிராக அவ்வப்போது செயலாற்றும் உறங்கும் விதைகள்!

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழரும்-தமிழர்அடிப்படைகளும்: தான்தோன்றியாக, வாழையடி வாழையாக செழித்து வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனாலும், உண்மையுணர்வோடு இவர், அல்லது இந்த அமைப்பு, அல்லது இந்த இயக்கம், அல்லது இந்தக் கட்சி, தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கானது என்று அடையாளம் காண முடிவதேயில்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் அச்ச இருள் வட்டம் சூழவே பயணிக்க வேண்டியிருக்கிறது. அந்த இருள் வட்டமாக தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிரான விரோத சக்திகள் ஒவ்வொரு தமிழனையும் பின்தொடர்கிறது பல்லாயிரம் ஆண்டுகளாக. ஆனாலும் தமிழரும்-தமிழர்அடிப்படைகளும்: தான்தோன்றியாக, வாழையடி வாழையாக செழித்து வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

யார் தொடங்கியது? எப்படி வளர்ந்தது? எப்படி சாதித்தது? செரிமானம் செய்ய முடியாத புதிராக இருக்கிறது சென்னையில் கிளர்ந்தெழுந்த சல்லிக்கட்டுப் போராட்டம், தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிரான விரோத சக்திகளுக்கு.

இந்த, தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிரான விரோத சக்திகளைக் கூட நாம் அடையாளம் காணமுடியாமல் அடிக்கடி திணறிப் போகிறோம். ராஜிவ் கொலையில் இந்த தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிரான விரோத சக்திகள் பங்காற்றியது வெளியில் இதுவரை வரமுடிய வில்லை. 

காந்தியார் அவர்கள், இந்திரா காந்தி ஆகியோர் கொலைப் பின்னணி தெளிவாகப் புரிகிறது. அவைகள் எதிரிகளின் நோக்கத்திற்காக எதிரிகளால் மேற்கொள்ளப் பட்டவைகள்.

ஆனால் ராஜிவ் கொலையில், ஆதாயம் அடைந்தவர்கள் வேறு, பாதிக்கப் பட்டவர்கள் வேறு. குற்றம் புரிந்தவர்களோ: ஆதாயம் அடைந்தவர்களும் இல்லை, பாதிக்கப் பட்டவர்களும் இல்லை. பாதிக்கப் பட்டவர்கள் 1.ராஜிவ் குடும்பத்தார். 2.ஈழத்தமிழ்ப் போராளிகளும், மக்களும். 3.குற்றவாளிக் கூண்டில் நிற்கிற அந்த ஏழுபேர்கள். 4.ராஜிவ் காந்தியோடு பலியான காவல்துறையினர்கள், அவர்கள் குடும்பத்தார். பாதிக்கப் பட்டவர்கள் ஒருவரை ஒருவர் சாடிக்கொள்ளும் வகையில் அழகாக பின்னப்பட்டிருக்கிறது சதிவலை.

தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிரான விரோத சக்திகளின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது: தொடர்ந்து அவர்கள் தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிரான விரோத சக்திகளாக இயங்கி வருவதால்.

ஆனால் யார் அந்த சக்திகள்? யார் அந்த சக்திகளுக்குத் தலைமை? தெரியவில்லை; புரியவில்லை. ஒட்டு மொத்த பார்ப்பனியர் என்று சொல்ல முடியவில்லை; வவேசு. ஐயர், பரிதிமாற்கலைஞர், பாரதியார் தொண்டுகள் நம்மைத் தடுக்கிறது. ஒட்டுமொத்தக் காங்கிரஸ் என்று சொல்லி விட முடியவில்லை. ராஜிவ் காந்தியே பலிகாடாதான் ஆக்கப்பட்டார் என்கிற செய்தி ஒளிந்து கொண்டு இருக்கிறது. தமிழிசை, எச்.இராஜா, பொன்.இராமச்சந்திரன்களை வைத்து ஒட்டு மொத்த பாஜக என்றும் சொல்லி விட முடியவில்லை; தருண்விஜய் போன்றவர்களும் தடுக்கிறார்கள். 

ஆக தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிரான விரோத சக்தி கொள்கையாக மட்டும் நிற்கிறது. அதற்கான மனிதர், அமைப்பு, கட்சி, எல்லாம் அவ்வப்போது வெளிப்படும். 

விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் கதை கருவாக அமைந்த 'உறங்கும் விதைகள்' போல தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிரான விரோத சக்தி அவ்வப்போது எங்கிருந்து வேண்டுமானலும் வெளிப்படும். நமது காலடியிலும் வெளிப்படலாம்; நமது முதுகுக்கு பின்னாலும் வெளிப்படலாம்; நமது முகத்துக்கு நேராகவும் வெளிப்படலாம்; விளைவுக்குப் பின்னர்தான் புரிந்து கொள்ள முடியும.; ஒ! இது அந்த உறக்க விதையா என்று 

அப்படி நேற்று பெங்களூரில் நடந்து முடிந்த 'பன்னாட்டு உறவுகள்' தலைப்பில் பேச கலந்து கொள்ள அழைக்கப் பட்டிருந்த ராஜபக்சே; அழைத்த திஹிந்து. ஓ! உறக்க விதைகளின் பன்னாட்டு உறவா! 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,059. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.