17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செந்தமிழ் நாடெனும் போதினிலே என்கிற பாரதியாரின் கவிதை முதல் பரிசுக்கு தகுதி பெறவில்லையாம். அடுத்த நிலை பரிசுதாம் பெற்றதாம். அந்த அடுத்த நிலை பரிசு பெற்ற கவிதையும், கவிதை எழுதியவரும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்கள்; ஆனால் அந்த முதல் பரிசு கவிதையும் இல்லை; அந்தக் கவிதை எழுதியவர் யார் என்கிற வரலாறும் இல்லை.

இப்படி நல்ல வகையாகவோ கெட்ட வகையாகவோ முதல், முதலாவது, என்பதை விட இரண்டாவதுக்கு மிகப் பெரிய பலம் உண்டு. இதை மிக மிக நன்றாகப் புரிந்து கொண்டு இரண்டாவது தளத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பவர்கள் தாம் ஆரிய இன மக்கள். 

தமிழ்மன்னர்களிடம் இரண்டாவது இடமாகிய நிருவாகத்தை கைப்பற்றிய இவர்கள் குமரியிலிருந்து இமயம் வரை அதிகாரம் பெற்றிருந்த தமிழகத்தை இன்றைக்கு வெறும் மாநிலமாக சுருக்கியதில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

இவர்களுக் கென்று தனிநாடு கிடையாது; விரும்பவும் மாட்டார்கள். வாழும் மண்ணில் அதிகாரத்தை மட்டும் கைப்பற்றுவார்கள்.

இவர்களுக்கென்று ஒரு மொழியும் கிடையாது; ஆனால், அனைத்து மொழியும் தங்கள் மொழியான சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தது என்று பெருமை பீற்றுவார்கள். சம்ஸ்கிருதம் பேசத்தெரிந்த ஒரு ஆரியனும் கிடையாது.

ஆரியன் ஒருவனும் ஆட்சிக்கு முயலமாட்டான் ஆனால் அதிகாரத்தை கெட்டியாக தலைமுறை தலைமுறையாக தக்க வைத்துக் கொள்வான்.

ஒரு கோயிலும் கட்ட மாட்டான் ஆனால் ஹிந்து சமய அறநிலையத் துறை என்று எல்லாக் கோவில்களிலும் அதிகாரம் செய்வான்.

இந்தியாவில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி பாஜக ஆண்டாலும் சரி இவர்கள் விருப்பப் படியே இந்தியாவில் அனைத்தும் நடக்கும். 

தன் அதிகாரத்திற்கு பங்கம் வந்தால் யாராக இருந்தாலும் போட்டுத் தள்ளி விட்டு பலியை அடுத்தவர் மீது சுமத்துகிற அதிகார மையத்தை விட்டு விலக மாட்டான்.

காந்தியைப் போட்டுத் தள்ளுவான்; இந்திரா காந்தியைப் போட்டுத் தள்ளுவான்; ராஜிவ்காந்தியையும் போட்டுத் தள்ளுவான்; ஆனால் அப்பாவிகளுக்கு விலங்கு மாட்டி வெளியில் வராமல் பார்த்துக் கொள்வான்.

ஆனால் ஆட்சி இவனுடையதாக இருக்காது ஆனால் அதிகார மையம் இவனிடம் மட்டுமே யிருக்கும்.

இந்தியாவின் அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்கான துறைகள் என்னென்ன என்பது இவர்களுக்கு தண்ணீர் பட்ட பாடு. நீட் கேட் தாட் பூட் என்று ஆயிரம் வந்தாலும் இவர்கள் ஈடுபடுகிற துறைகள் இவர்கள் மட்டும் பயணிக்கிற எளிய வழியாக இருக்கும்.

இராஜிவ் கொல்லப் பட்டதில் பயனடைந்தவர்கள் யார்? பாதிக்கப் பட்டவர்கள் யார்? யார்? தண்டனை அனுபவிப்பவர்களோ நல்லது கெட்டது எதற்கும் தகுதியானவர்களாக சொல்லப் படமுடியாத அப்பாவிகள். 

இராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப் பட்டவர்களைப் பார்த்தால், பெட்டிக் கடையில் மிட்டாய் திருடி மாட்டிக் கொண்ட அப்பாவிகள் மாதிரிதான் இருக்கிறார்கள். பேரறிவாளன் மட்டுந்தாம் கொஞ்சம் கெத்தாக இருக்கிறார். ஆனால் அவர் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்கு தொடர்ந்து புது புது சான்றுகள் கிடைக்க கிடைக்க தள்ளி விடுவது நன்றாக தெரிகிறது.

வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதையாக, இராஜிவ் கொலைக்கு பின்பு தமிழீழம் தாறுமாறாக்கப் பட்டது. அப்படி தாறுமாறாக்க படுவதால் ஆதாயம் அடைவது தமிழ், தமிழர் விரோத சக்திகளான ஆரியர்தானே. அப்படியானால் கொலைக்கான சதி சந்திரசாமி, சுப்பரமணிய சாமிகளிடம் தான் உருவானது என்று திருச்சி வேலுச்சாமி பறைசாற்றிக் கொண்டிருப்பது உண்மைதானே.

தமிழர்கள்! எடப்பாடிகளாய், பன்னீர்களாய் தமிழக பஞ்சாயத்து தலைமைக்கும், வறண்ட காவிரியில் மணல் அள்ளுவதற்கும் அலைமோதுவதால் யாருக்கும் பயன் இல்லை. இந்தியாவின் இரண்டாம் இடமான ஆரியர்கள் ஆக்கிரமித்திருக்கிற அனைத்து துறைகளிலும், அதிகாரத்திற்காக செயல்பட வேண்டும். அப்போது, யார் ஆண்டாலும் தமிழர்களை வாழ வைக்க முடியும். முயல்வோமா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,835.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.