Show all

ஐந்தாம் வகுப்பு வரைக்கான கல்வியைத் தாய்மொழியில் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும்

அயலவர்களிடம் நமது உடைமையை ஒப்படைத்து விட்டு,

கொஞ்சம் கூடுதல் கூலியில் நம்முடைய சில குழந்தைகள் நிருவாகத் தளத்தில் இயங்கப்போகும் கனவில்,

நம்முடைய தமிழர்களிலேயே பெரும்பாலான குழந்தைகள் மிக மிகக் குறைந்த கூலியில் உடல் உழைப்புத் தளத்தில் நிற்கப் போகிற அவலத்தைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாய்

போட்டி போட்டுக் கொண்டு,

மழலையர்க் கல்வியிலிருந்தே ஆங்கிலம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

எத்தனை பேர் ஆங்கிலம் கற்பினும் சரி முதல் பத்து பேருக்கு மட்டும் தான் நிருவாகத் தளத்தில் இடம் அளிப்பர் (அளிக்க முடியும்) அயல் உடைமையாளர்கள்.

ஆங்கிலக் கல்வி கற்ற போதும் அடுத்த தொன்னூறு பேர் உடல் உழைப்புத் தளத்தில்தாம் நிற்க வேண்டியிருக்கும் நின்று கொண்டுதாம் இருக்கிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.